மோசடியான முறையில் தொடருந்து பயணக் கட்டணங்கள் அதிகரிப்பு!
Thursday, October 4th, 2018
அரசாங்கம் மோசடியான முறையில் தொடருந்து பயணத்திற்கான கட்டணங்களை அதிகரித்துள்ளதாக தொடருந்து பயணிகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பாதீட்டு யோசனைக்கு அமைவாக ஒக்டோபர் மாதத்தின் முதலாம் திகதி முதல் பயணச்சீட்டு மற்றும் சீசன் பயணச்சீட்டுக்களின் கட்டணங்களை அதிகரிக்க தொடருந்து திணைக்கம் நடவடிக்கை எடுத்தது.
கடந்த 10 வருடங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த கட்டண சீர்த்திருத்தத்தில் குறைந்த பட்ச கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. எவ்வாறாயினும் , மற்றைய கட்டண அதிகரிப்பு சதவீதங்கள் தொடர்பில் தற்போதைய நிலையில் பிரச்சினை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைத்தியசாலைகளுக்கு செல்ல மறுக்கும் வைத்தியர்கள் –நோயாளர்கள் அவதி!
கிளாலியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டை பயனாளியிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாள...
கியூபா - இலங்கை அரச தலைவர்களுக்கிடையில் சந்திப்பு - சுகாதாரம், விளையாட்டு மற்றும் விவசாயத்துறை தொட...
|
|
|


