வடக்கு கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
Tuesday, July 17th, 2018
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலயத்தின் எசல வீதியுலாவின் நான்காவது நாளான இன்று இரவு 7 மணிக்கு வீதியுலா நடைபெறும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் நேற்றைய தினம் வரை கதிர்காமம் புனித பூமிக்கு வருகைதந்துள்ளனர்.
நான்கு அன்னதானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பக்தர்களின் வசதிக்காக ஆலய மூலஸ்தானமும், பரிவார மூர்த்திகளும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கதிர்காம கந்தன் ஆலயத்தின் பதில் பஸ்நாயக்கநிலமே தில்றுவான் ராஜபக்ஷ தெரிவித்தார்.
Related posts:
பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைவு!
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


