சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் தீர்மானம்!
Saturday, June 2nd, 2018
நான்காம் கட்ட மீளாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 252 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு அனுமதியளிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
குறித்த இந்தத் தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாண்டு நீடிக்கப்பட்ட திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய, நாணய நிதியத்தினால் இலங்கைக்கு தற்போதுவரை ஆயிரத்து 14 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.நா சபை இலங்கை சிறுவர் உரிமைகள் தொடர்பில் பரிந்துரை!
'ஒமிக்ரொன்' வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேர...
இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் - ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வரவதாக அனர்த்த முகாமைத்துவ மத்த...
|
|
|


