டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் – டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
Tuesday, March 28th, 2023
இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட டயர் தொகை களஞ்சியத்தில் உள்ளமையினால் ஐந்து வீதம் மாத்திரமே விலைக்குறைப்பு செய்ய முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது டொலருக்க நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளமையினால் தற்காலிகமாக ஐந்து சதவீதத்தினால் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் மூன்று மாதங்களில் 15 சதவீதமாக விலையினை குறைக்க முடியும் எனவும் டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2016இல் மழை வீழ்ச்சி மிகக் குறைவு!
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் கடன்!
கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிப்பு - காமினி வலேபொட தெரிவிப...
|
|
|
நாடளாவிய ரீதியில் கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது -வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த ...
மூன்று குடும்பங்களின் தேவைகளுக்காக 200 குடும்பங்களுடன் விளையாடாதீர்கள் - பூநகரி ஸ்ரீமுருகன் கடற்றொழி...


