தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை – கனடாவில் சம்பவம்!
Tuesday, May 29th, 2018
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றிரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய ரொரண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சீன அரசாங்கம் இலங்கைக்கு தொழிநுட்ப உதவி!
சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு இந்திய பெற்றோலிய நிறுவனத்தினால் நன்க...
அறுபது கோடி ரூபா நட்டத்தில் இயங்கும் லங்கா சதொச - கோப் குழு சுட்டிக்காட்டு!
|
|
|
நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் - சில பகுதிகளில் இரவில் மின்சார தடை ஏற்பட வாய்ப்பு - மின்...
ஐந்தாண்டு விடுமுறை சுற்றறிக்கை ஆசிரியர்கள், சுகாதார துறையினருக்கு பொருந்தாது - பொது நிர்வாக அமைச்சின...
வடக்கு உட்பட 13 மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கட...


