சீன அரசாங்கம் இலங்கைக்கு தொழிநுட்ப உதவி!
Tuesday, January 30th, 2018
சீன அரசாங்கம் மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செயற்திட்ட பணிகளுக்கான தொழிநுட்ப உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
இந்த உதவிகள் சீன அரசாங்கத்தின் தெற்கு ஒத்துழைப்பு அமைப்பினால் வழங்கப்படவுள்ளன. செயற்திறன் மிக்க விவசாய உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதன் மூலம்உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் பழ உற்பத்தி பூங்காக்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அரச தனியார் பங்களிப்பு முதலீடுகளுக்கு முன்னுரிமைஅளிக்கப்படவுள்ளது.
Related posts:
பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!
கம்பஹா பியகமவில் உள்ள MAS ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!
இன்றும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


