சிறுவர்களைத் தாக்கும் மர்ம வைரஸ்: அச்சத்தில் தென்னிலங்கை!

Saturday, May 19th, 2018

தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலினால் கடந்த சில நாட்கள் 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளளர்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஐந்து சிறுவர்கள் மரணமடைந்தமை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை நிறுவனமும் கராப்பிட்டிய வைத்தியசாலையும் இணைந்து விரிவானவிசாரணையை நடத்துகின்றன என்று தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நோய் சிறுவர்களுக்கு மாத்திரமன்றி வயது வந்தவர்களுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால் மக்கள் நடமாட்டம் கூடுதலான இடங்களில் இருந்து விலகியிருக்குமாறு தென் மாகாணசுகாதாரப் பணிமனை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிகமான நோயாளர்கள் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, தங்காலை போன்ற இடங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளார்கள்.

Related posts:

கட்டண திருத்தம் தொடர்பில் பேருந்து தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையில் மற்ற...
மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது - உச...
வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -  பதில் பொலிஸ...