குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!
Saturday, December 3rd, 2022
உலகின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, நெருக்கடி சூழ்நிலைகளை சமாளிக்க கடனாளி நாடுகளுக்கு எவ்வாறு உதவியை துரிதப்படுத்தலாம் என்பதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறினார்.
அடுத்த வாரம் சீன அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கும்போது இந்த விடயம் குறித்து விவாதித்து மிகவும் பொருத்தமான தீர்விற்கான பொதுவான பொறிமுறையை ஏற்றுக்கொள்வோம் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ...
8 ஆம் திகதிமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – அதிபர் ஆசிரியர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்...
நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரிப்பு - மக்கள் பெருங்கவலை!
|
|
|
எதற்கும் ஒரு வரையறை உள்ளது - நீதிமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ர...
சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் - அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!
நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு - வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வ...


