புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்பாட்டல்!

Wednesday, May 16th, 2018

எதிர்வரும் தினங்களில் புற்று நோய்க்காக வழங்கப்படுகின்ற மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை, மேற்கொள்ளப்படும் என்று சுகாதார போசாக்குமற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 15 இலட்சம் ரூபா வரை வரையறுக்கப்பட்ட செலவானது  தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளர்கள் இறப்பது நோயினால் அல்ல நோய்க்கான சிகிச்சைக்கு செலவிடுவதற்கு பணம் இன்மையே என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts:

அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் நாளைமுதல் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் - அரச சேவை, மாகாண சபைகள...
நிறை குறைந்த பாண் - சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் - நுகர்வோர் விவகார அதிகாரசபை ...
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே இல...