44 பேருக்கு வெற்றிடம்: உயர் கல்வி அமைச்சு கண்டுகொள்ளவில்லை – கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி குற்றச்சாட்டு!
Thursday, May 10th, 2018
கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் பதிவாளர் தொடக்கம் சிற்றூழியர் வரையில் 44 வெற்றிடங்கள் நிலவுகின்றன. பெரும் இக்கட்டுநிலையிலேயே கல்லூரி இயங்குகிறது. உயர் கல்வி அமைச்சுக்கு அறிவித்தும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் குற்றஞ்சாட்டுகிறார்.
கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கான ஆளணி, சுகாதாரத் தொழிலாளர்கள், ஏனைய பணிகளுக்கான வேலையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு வெற்றிடங்கள் நீடிக்கின்றன. இக்கட்டான நிலையிலேயே கல்லூரியை நாம் நடத்தி வருகிறோம். உயர் கல்வி அமைச்சுக்கு இவை தொடர்பில் அறிவித்திருந்தோம். இன்னும் நியமனங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Related posts:
2017 இந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம்!
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வெளியானது அதி விசெட வர்த்தமானி !
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் - 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதம் அனர்த்த முகாமைத...
|
|
|


