பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு – விக்டர் ஐவன் !
Tuesday, May 8th, 2018
இலங்கை தற்பொழுது பெரும் நெருக்கடிக்கு உட்பட்டுள்ளது. அரசும், நாட்டிலுள்ள சகல அரச நிறுவன முறைமையும் வீழ்ச்சிக்கு முகம்கொடுத்துள்ளன என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளயில் நேற்று நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
நாட்டின் அனைத்துப் பகுதிகளும் குப்பையாக மாறியுள்ளன. அரசியல்வாதிகளுக்கு மக்களிடத்திலுள்ள வரவேற்பும் காற்றாக மாறியுள்ளது.
எந்தவித சட்ட முறைமையும் செயற்படுத்த முடியாத அளவுக்கு நாட்டு நிலைமை மோசமடைந்துள்ளது. குறைந்த பட்சம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றைக் கூட சரியான முறையில் வெளியிட்டுக் கொள்ள முடியாத நிலைக்கு நாட்டு நிலைமை தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் தலைவர்களிடம் ஞானம் இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது என்றார்.
Related posts:
குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ த...
மின் கட்டண அதிகரிப்புக்கு பல்வேறு தரப்பு அதிருப்தி - நாடுதழுவிய நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் ...
செலவின சட்டமூலம் இன்று நிறைவேறுமாயின் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் - பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!
|
|
|


