போலி நாணயத் தாள்கள்களுடன் ஒருவர் கைது!
Friday, April 13th, 2018
45 போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் வவுனியாவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் பிரிவை சேர்ந்த குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அலவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரை நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
Related posts:
வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் இடம்பெற்ற சித்திராப் பூரணை நிகழ்வில் 500 பேர் பிதிர்க்கடன் நிறை...
போலி நாணயத்தாள்: அச்சகத்தில் பணிபுரியும் பெண் கைது!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
|


