சுகாதார வளர்ச்சி தொடர்பான தேசிய மாநாட்டில் சங்கானை மருத்துவமனை!

Friday, March 9th, 2018

சுகாதார வளர்ச்சி சம்பந்தமான தேசிய மாநாட்டுக்கு வடக்கில் சங்கானைப் பிரதேச மருத்துவமனை தெரிவு செய்யப்பட்டுள்ளது. தன்னிறைவான வளர்ச்சிப் போக்கின் ஊடாக நிறைவுகாண் சேவையை எவ்வாறு மக்களுக்கு வழங்கியது என்பதை வெளிப்படுத்தும் முகமாக இந்த மாநாடு அமைகிறது.

எதிர்வரும் 9 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தலைமையில் கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் நடைபெறவுள்ளது என்று சங்கானைப் பிரதேச மருத்துவமனை மாவட்ட மருத்துவ அதிகாரி ரி.பிரகாசன் தெரிவித்தார்.

Related posts: