நேற்றும் 12 விபத்து மரணங்கள்!

Friday, April 2nd, 2021

நாடு முழுவதும் நேற்றையதினம் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில்,முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேரும் ,உந்துருளியில் பயணித்த இருவரும்,பாதசாரிகள் ஐந்து பேரும்,பாரவூர்தியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியா-ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன், தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


தென்னிந்தியாவையும் வடக்கு கிழக்கையும் இணைக்க புதிய பாலம் - பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெள...
புதிய ஆண்டுமுதல் கல்வி முறையில் புதிய முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பி...
டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி - பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாள...