வாழைப்பழத்தின் விலையில் திடீர் சரிவு
Friday, March 2nd, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீரென சரிவடைந்ததால் வாழைச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் நுகர்வுப் பயன்பாடு குறைந்து காணப்படுவதாலும் செய்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நீர்வேலி வாழைக்குலை விற்பனைச் சந்தைக்கு அதிகளவிலான வாழைக்குலைகள் வந்து சேர்கின்றன. நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் வந்து சேர்ந்தன. கதலி வாழைப்பழம் கிலோ 30 ரூபா வரை விற்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகமாக வியாபாரிகள் சந்தைக்கு வாகனம் மூலம் வருகை தந்து இவற்றைக் குலைகளாக எடுத்துச் செல்கின்றனர். வாழைப்பழத்தின் திடீர் விலை வீழ்ச்சியால் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்கள் 57 பேர் இதுவரை பகிடிவதை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் - உயர்கல்வி இராஜாங்க அமைச்...
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை - நியூயோர்க்கில் ஜனாதிபதி ...
ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க் வேண்டும் -அமைச...
|
|
|
இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது - வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான க...
மாணவர்களை அனுப்பி சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்து...


