நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை – நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Tuesday, September 19th, 2023
முக்கிய நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த பெரும் வல்லரசுகள் முயற்சித்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் எந்தவொரு இராணுவ ஒத்திகைக்கும் இலங்கை ஆதரவளிக்காது எனவும் அவார் மேலும் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் உரையாடல் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள பல நாடுகள், நல்வாழ்வு மற்றும் வளர்ச்சியை சமரசம் செய்யும் பெரும் சக்திகளுக்கு இடையேயான சண்டைகளுக்கு இழுக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா !
நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறும் வாகன சாரதிகள் தனிமைப்படுத்தபடுவர் - பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிக்க முடியாது - அமைச்சர் ப...
|
|
|


