அமெரிக்கா மீது துருக்கி ஜனாதிபதி குற்றச்சாட்டு !
Friday, February 16th, 2018
துருக்கிக்கு அச்சுறுத்தலாக உள்ள சிரியாவின் எப்ரின் மாகாணத்தில் குர்தீஸ் போராளிகள் தொடர்பில், துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தாயிப் எர்டோகன் அமெரிக்காவை குற்றச்சாடியுள்ளார்.
சிறியாவின் அரசாங்கத்தை கவிழ்த்து சிறியாவின் அதிகாரத்தை கைப்பற்ற குர்தீஸ் பிரிவினைவாதிகளுக்கு மறைமுகமான உதவிகளை அமெரிக்கா செய்துள்ளத
அத்துடன், அவர்களுக்கு இன்னும் ஆயுதங்களை அமெரிக்கா விநியோகித்து வருவதாகவும் ஏர்டோகன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குர்தீஸ் போராளிகளுக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கிவருவதாக துருக்கிய ஜனாதிபதி தொடர்ச்சியாக அமெரிக்கா மீது குற்றம் சுமத்தி வருகின்ற போதிலும் அமெரிக்கா அதனை நிராகரித்துவருகின்றது.
இந்தநிலையில், பண்நாட்டு அமைதிகாப்பும் படையில் அங்கம் வகிகும் துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது ஈரான்!
சிலி நாட்டு விமானம் 38 பேருடன் மாயம்!
ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - புடின் அதிரடி அறிவிப்பு!
|
|
|


