மதுபோதையில் மோட்டார் வாகனம் ஓட்டியவருக்கு தண்டம்!

Sunday, February 4th, 2018

சாவகச்சேரியில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை செலுத்திப் பார்த்தவருக்கு சாவகச்சேரி நீதிமன்றினால் 12 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.

கொடிகாமம் பொலிஸாரால் பதிவு செய்யப்படாத மற்றும் காப்புறுதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை  விசாரித்த நீதிவான் 12 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.

இதேவேளை மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு பல ஆபத்தான நோய்களாலும் பதிக்கப்பட்டிருந்தனர் – தொற்று நோயி...
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ...
தொடரும் சீரற்ற காலநிலை - 2004 ஆம் ஆண்டு காணப்பட்ட கிரக நிலை இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியும் காண...