15 ஆம் திகதியுடன் A/L பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு!
Thursday, January 11th, 2018
எதிர்வரும் 15ம் திகதியுடன் 2017ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களின் கால அவகாசம்நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர் மூலமும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தினால் தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்டஅறிவித்தலுக்கு அமையவும் விண்ணப்பங்களை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இதற்கான விண்ணப்பத்தை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை: விடுதலையாகி மீண்டும் கைதான நபருக்கு தொடர்ந்தும் மறியல்!
எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம்!
கொரோனா அச்சுறுத்தலின் உச்சத்தில் இலங்கை - ஒரே நாளில் 44 கொவிட் மரணங்கள் பதிவு!
|
|
|


