தபால் மூல வாக்களிப்புக்கு 5 இலட்சம் பேர் தகுதி!
Tuesday, January 2nd, 2018
இம்முறை உள்ளராட்சி மன்றத் தேர்தலுக்காக 5 இலட்சம் அரச பணியாளாகள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குப்பதிவுகள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.இதன்படி, அரசாங்க ஊழியர்கள் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிப்பார்கள்.பொலிஸ் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஜனவரி மாதம் 22ஆம் திகதி தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துன்புறுத்தப்பட்ட குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு!
27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்ப்பு!
ஜனவரி.1 முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு - நேரில் சென்று கடவுச்சீட்டை பெறும் சாத்தியம் இல்லை என தெரிவ...
|
|
|
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுகள் யாவும் ஊர்காவற்றுறை மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக ம...
விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் - ஓட்டமாவடி பிரதேச...
பொலிசார் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் - பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்...


