வடக்கு -கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்தது.!

Thursday, December 21st, 2017

யாழ் மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே சாவகச்சேரி நகரசபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வகையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்களை இன்றையதினம் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், என பலர் கலந்துகொண்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை - சண் நியூஸ் தொலைக்காட்சியில் எம்.பி ...
தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி ...
யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக கடற்றொழில் அமைச்சால் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்க நடவடி...