கோண்டாவில் பகுதியில் முறுகல் நிலை:  இருவர் கைது!

Monday, December 18th, 2017

கோண்டாவில் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற முறுகல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் – புட்சட் வீதியிலுள்ள கடையொன்றில் பணி புரிந்துக் கொண்டிருந்த ஊழியர்களுக்கும், மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற 6 பேருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த கருத்து முரண்பாட்டின் பின்னர் அங்கிருந்து சென்றவர்கள் கூரிய ஆயுதங்களுடன் திரும்பி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொதுமக்கள் குழுமிய நிலையில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் வாள் மற்றும் இரும்பு குழாய்களை கைவிட்டு சென்றுள்ளனர். முரண்பாடு தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts:


பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு நாடாளுமன்ற விசேட குழு – சபாநாயகரிடம் பெண...
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான மக்களின் உரிமை - அமைதியை சீர்குலைக்கும் எந்த செயற்பாடுகளிலும் ஈட...
இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்படாது - அமைச்சர் ம...