தொண்டமானின் மகனை கைது செய்ய உத்தரவு!

Tuesday, December 12th, 2017

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஸ்கெலியா ௲ சாமிமலை ௲ ஒல்ட்டன் பகுதியில் பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஏற்கனவே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ் உட்பட 4 பேர் கைதாகி இருந்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. அவர்கள் மீண்டும் எதிர்வரும் 2018ம் ஆண்டு 4ம் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.

Related posts:

எதிர்வரும் மாதம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு- அமைச்சர் மஹிந்த அமரவீர!
இன்று கோட்டாபயவை போ என்பவர்கள் நாளை உங்களையும் கூறுவார்கள் - ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பத...
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை - ...