வடக்கு – கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு விN~ட திட்டம் வேண்டும்!

Sunday, December 10th, 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு விN~ட திட்டம் என்ற அடிப்படையில் ஒரு நிதியுதவித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,

வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களுக்கென ஒரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் – அந்த நிறுவனத்தில் தொழில் செய்கின்ற நிலையில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அல்லது இறக்க நேரிடும் ஊடகவியலாளர்களுக்கென்று எவ்வித கொடுப்பனவுகளையும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்காத ஒரு நிலையே காணப்படுகின்றது.

எனவே, தனியார் ஊடக நிறுவனங்கள் என்ற போதிலும், ,வற்றில் பணி புரிகின்ற ஊடவியலாளர்களது நலன்களைப் பேணத்தக்க சில ஒழுங்கு விதிகளை இந்த நாட்டின் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எடுக்க வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், அரச தொலைக் காட்சிகளிலும், வானொலிகளிலும் தமிழ்ச் சேவைகளில் தேசிய கீதம் ஒலி – ஒளிபரப்பப்படும்போது, அதனைத் தமிழ் மொழியில் ஒலி – ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:

ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுக...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்த...
பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைக...

இந்து ஆலயங்களின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!
வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவான...
அரிசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் – கரைச்சி பிரதேச பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ள...