அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானம்!
Wednesday, December 6th, 2017
சீன நிறுவனத்திடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பது தொடர்பான மூலோபாய அபிவிருத்தி சட்டமூலத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டியிருக்கின்றது.
மேலும் எதிர்வரும் 7ஆம் திகதி அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அதன் பின் அமைச்சரவைப் பத்திரம் பெற்று வர்த்தமானி அறிவிப்பு விடுக்கபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர...
முன்னாள் பிரதமர் மகிந்தவிடம் குற்றப் புலனாய்வு துறையினர் வாக்குமூலம்!
மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினா...
|
|
|


