முன்னாள் பிரதமர் மகிந்தவிடம் குற்றப் புலனாய்வு துறையினர் வாக்குமூலம்!
Thursday, May 26th, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தனது கட்சி விசுவாசிகள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக நாடு முழுவதும் அமைதியின்மை வெடித்த சம்பவங்கள் குறித்து முன்னாள் பிரதமர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தார்.
மகிந்த ராஜபக்ச நேற்று மாலை சுமார் 03 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பலர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தமது கடவுச்சீட்டை நீதிமன்ற காவலில் ஒப்படைக்கவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுற்றுலா பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவருக்கு விளக்கமறியல்!
மக்களுக்காக வியர்வை சிந்தாதவர்களை அரசியல் பிரதிநிதிகளாக்கியதே தமிழ் மக்களது இன்றைய வாழ்வியல் நிலைக்க...
அடுத்த வாரம்முதல் அனைத்து வீட்டுக்கும் இலவச ஆயுர்வேத மருந்துப் பொதி வழங்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்...
|
|
|


