மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு!
Monday, November 27th, 2017
மழையுடன் காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது
சப்ரகமுவ , மத்திய, வடக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மழை பெய்யக் கூடும் என இடர் முகாமைத்துவ நிலைத்தியத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மழையுடனான வானிலை நிலவும் சந்தர்பங்களில் ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சப்ரகமுவ , மேல் , மத்திய, வட மேல் , வட மாகாணங்களைச் சேர்நத மக்கள் மழையுடனான வானிலை நிலவுகின்ற போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலைத்தியத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தெல்லிப்பழை கொல்லங்கலட்டி ஞான வைரவர் ஆலயத்தில் திருட்டு முயற்சி முறியடிப்பு!
இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை - வணிகர் சங்கம்!
எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது - நிதி இராஜாங்க அமைச்...
|
|
|


