யாழில் கூரிய வாளுடன பயணித்த இரு இளைஞர்கள் கைது
Tuesday, November 21st, 2017
யாழ். இராசபாதை வீதியில் முச்சக்கரவண்டியொன்றில் கூரிய வாளுடன் பயணித்த இரு இளைஞர்கள் விசேட அதிரடிப் படையினரால் திங்கட்கிழமை(20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுகளுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரையும் விசேட அதிரடிப்படையினர் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.அத்துடன் இரு சந்தேகநபர்களும் பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் கூரிய வாள் என்பனவும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.
Related posts:
யாழ்ப்பாண நீதிவான் மன்றின் அறிவித்தல்!
சம்பள உயர்வு வழங்கப்பட்டும் போராட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாத...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலா? – தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பு!
|
|
|


