பருவப்பெயர்ச்சி காலநிலையில் அதிகரிப்பு !
Monday, October 23rd, 2017
அடுத்து வரும் சில தினங்களில் பருவப்பெயர்ச்சி காலநிலையில் படிப்படியாக அதிகரிப்பு நிலை காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மன்னார் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 முதல் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை வருகை!
70 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு!
அரசு ஊழியர்களுக்காக விடுமுறைகளை குறைக்க நடவடிக்கை !
|
|
|


