யாழ். கொக்குவிலில் வாள்வெட்டுக் குழு அட்டாகாசம்: சீ .சீ. ரி.விக் கமராவின் உதவியுடன் விசாரணை தீவிரம்
Monday, October 2nd, 2017
மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் குழு யாழ். கொக்குவில் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்று மீது தாக்குதல் நடாத்திச் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. நேற்று(01) இரவு-08.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மூன்று மோட்டார்ச் சைக்கிள்களில் தங்கள் முகங்களை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு கொக்குவில் சந்திப்பகுதியில் அமைந்திருந்த வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதலை நடாத்தியது. வர்த்தகநிலையத்திற் கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்ச் சைக்கிளையும் உடைத்துச் சேதமாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
ஆபத்தை விளைவிக்கும் வாள்கள், கோடாரிகளுடன் குறித்த குழு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகினறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந் நிலையில் மேற்படி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ. ரி.விக் கமராவில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சியின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
தவறுகளை திருத்தி புதிய அரசியல் பயணம் – நாமல்!
முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம...
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்ல வேண்டும் - யாழ்ப்பாண பொலிஸார் விசேட அறிவிப்பு...
|
|
|


