யாழ்.-கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு மனித  உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு !

Saturday, May 21st, 2016

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான மனித  உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு யாழ். கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை(20-05-2016) காலை -9 மணிக்கு  ஆரம்பமாகியது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தச்  செயலமர்வு யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது இலங்கைமனிதஉரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.அம்பிகாஇ இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்வி அதிகாரி எஸ்.கபிலன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர் .

யாழ்ப்பாணம்  மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த  ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்ட இந்தச் செயலமர்வு நாளை சனிக்கிழமையும் நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவடைந்தன உயர்தரப் பரீட்சை - பரீட்சைகள் ஆணையாளர் ...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற...
நிவாரணங்களை எதிர்பார்க்காமல் கடனை முகாமைத்துவம் செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் தெ...