அத்தியாவசியமற்ற உணவு பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்படும் – ஜனாதிபதி!
Wednesday, September 27th, 2017
அத்தியாவசியமற்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்து உணவு பொருட்களினதும் இறக்குமதியைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய பொருளாதார பேரவையின் ஊடாக இதன்பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார். நாட்டின் பண்பாட்டினையும் தனித்துவத்தையும் பாதுகாத்து எமக்கு தேவையான உணவுபொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும். அத்துடன் உள்நாட்டுவிவசாயிகளின் உற்பத்திக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தையும் நாட்டின்பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டுமாயின் உள்நாட்டு பொருட்களுக்கு கூடுதல் பெறுமதி வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
செயலக அலுவலர்களுக்கும் அதிகஸ்டப் பிரதேசக் கொடுப்பனவு - வழங்குமாறு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் கோரிக...
அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் உத்தரவு !
யார் ஆட்சிக்கு வந்தாலும் 2048 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்துவது தொடர்பான நெருக்கடியில் இருந்து இலங்கை ம...
|
|
|


