மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவு: 2 வாரங்களில் நஷ்டஈடு!
Monday, September 25th, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களின் குடும்பத்தாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நஷ்டஈட்டை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய காப்புறுதி நிதியம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 18,000 பேருக்காக 900 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது வரை 9,000ம் குடும்பங்களுக்கான காசோலை எழுதப்பட்டுள்ளதாகவும், தேசிய காப்புறுதி நிதியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்னும், இவர்களுக்கு வழங்கத் தேவையான நிதி ஆறு மாதங்களுக்கு முன்னரே கொலன்னாவை பிரசேத செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த விடயங்கள் நேரடியாக கண்காணிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டுள்ளது - சாரதிகளுக்கு பொலிஸ...
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள மாட்டோம் - மத்திய வங்கி ஆளு...
நல்லூர் ஆலய காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு கல்வியங்காட்டில் இடம்பெற்றது!
|
|
|


