துப்பாக்கிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தியவை அல்ல – குற்றப் புலனாய்வு திணைக்களம்!
Thursday, September 21st, 2017
ரத்துபஸ்வெல பகுதியில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அனுப்பட்ட 40 துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்டவை அல்ல என இரசாயன பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகளை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக நீதவான் லலித கங்கங்கர உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் !
பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் விலை மோசடி – நுகர்வோர் கடும் விசனம்!
விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் - புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்...
|
|
|


