2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பரிஸில்
Friday, September 15th, 2017
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பிரான்ஸின் பரிஸ் நகரம்பெற்றுள்ளது. பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக்குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஹம்பர்க் (ஜேர்மனி), ரோம் (இத்தாலி),
பரிஸ் (பிரான்ஸ்), புடாபெஸ்ட் (ஹங்கேரி) உள்ளிட்ட நகரங்கள் விருப்பம் தெரிவித்தன. ஆனால்,நிதி பிரச்னை காரணமாக பாரிசைத் தவிர மற்ற நகரங்கள் ஒலிம்பிக் நடத்தும் போட்டியிலிருந்து விலகின. இதனால், 2024ஆம் ஆண்டு பரிஸில் ஒலிம்பிக் அரங்கேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 2028ஆம் ஆண்டில் போட்டியை நடத்த அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெற்றுள்ளது.
Related posts:
நிதி மோசடிகளை விசாரிக்கும் ட்ரயல் அட்பார் நீதிபதிகள் நியமனம்!
மருந்துகளின் விலை அதிகரிப்பு - விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது - இந்திய மக்களின் மருத்துவ அன்ப...
இலங்கையில் அவசரநிலையைப் பிரகடனம் செய்யவும் - மருத்துவர்கள் அவசர கோரிக்கை!
|
|
|


