போர்ப் பயிற்சிக்கு ஜனாதிபதி வாழ்த்து!
Friday, September 15th, 2017
இலங்கை இராணுவத்தினரால் எட்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கடல்காகம்’ போர்ப் பயிற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்
இலங்கையின் முப்படையினர் மற்றும் 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவத்தினரின் பங்கேற்புடன் இந்த போர்ப்பயிற்சி கடந்த 03 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த நிலையில், நேற்று முற்பகல் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற போர்ப்பயிற்சியினை தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாகப் ஜனாதிபதி பார்வையிட்டார்
இதன்போதே அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஈ.பி.டி.பியின் மேதின அறைகூவல் : வடக்கு கிழக்கு எங்கும் சுவரொட்டிகள்!
சர்வதேச வீடமைப்புத் திட்த்தின் 30ஆவது ஆண்டு விழா இலங்கையில்!
வேலையற்ற பட்டதாரி மீது வாள்வெட்டு தாக்குதல்!
|
|
|


