மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அதிரடிப்படைப் பாதுகாப்பு!
Thursday, September 7th, 2017
நாட்டில் பெரும் சர்ச்சையை எற்படுத்தியிருக்கும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனையில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் வெளிவந்த தகவல்கள் காரணமாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி பறிபோனது.
அத்துடன் பிணைமுறி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதுடன் விசாரணை தொடர்பான பல முக்கிய ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆணைக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து தற்போது விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட மூவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
வடக்கின் சுகாதார சேவை உயர் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் - பணிப்பாளராக பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமை...
உயர்தர பரீட்சை - உலங்கு வானூர்தியில் எடுத்துவரப்பட்ட நெடுந்தீவின் விடைத்தாள்கள்!…….
|
|
|
நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு - களத்தில் 12000 படையினர் என பிரதிப் பொலிஸ்மா அதி...
ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சர் மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வருகை - ஜப்பான் – இலங்கை இடையிலான உறவுக...
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு!


