விமான சேவைகள் முற்றாக தடைப்படும் அபாயம்!
Wednesday, July 26th, 2017
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கனியவள ஊழியர்கள் தொடர்ந்து பணி புறக்கணிப்பால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையால், பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வு கடிதம் கிடைக்கும் வரையில் பணி புறக்கணிப்பு கைவிடப்படாதென கனியவள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விமானங்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலை நீடிக்கும் பட்சத்தில் விமான சேவைகள் முற்றாக தடைப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது
Related posts:
இந்தியாவில் ஒரே நாளில் 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!
பொய்யான குற்றச்சாட்டு - ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
முக்கிய தேயிலை ஏற்றுமதி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருகிறது - நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளு...
|
|
|


