இலங்கைக்கான தொடரிலிருந்து முரளி விஜய் வெளியேற்றம்!
Tuesday, July 18th, 2017
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய், காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, மற்றோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷீகர் தவான் இணைக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமே, முரளி விஜய்க்கு, அவரது மணிக்கட்டில் உபாதை காணப்பட்டது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் வைத்து நடந்த தொடரிலும், அவருக்கு இவ்வுபாதை காணப்பட்டது.
இந்நிலையில், இலங்கைத் தொடருக்கு முன்னதான பயிற்சிப் போட்டியில், அவருக்கு அவ்வுபாதை மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது
Related posts:
ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் வியாழனன்று ஏற்றப்படும்!
I.P.L தொடர் : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி!
அஞ்சலோ மத்தியூஸ் கோரிக்கை!
|
|
|


