67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில்!
Tuesday, July 4th, 2017
இவ்வருடத்தில் இதுவரை 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் இவ்வாறு 61 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். பணியகத்தின் முறைப்பாடுகளை விசாரணை செய்ய ஒத்துழைக்காமை, பணியகத்தில் பதிவு செய்யாமல் நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், போலி ஆவணங்களை முன்வைத்தல், வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஊழியர்களை அனுப்பாமை போன்றவை இந்த தடைப்பட்டியலில் சேர்க்க காரணமா உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பெரும் மோசடி அம்பலம்!
ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களியுங்கள் - சுற்றுச்சூழல் அதிகார சபை நாட்டு மக்களிடம் கோரிக...
புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் - கையெழுத்து போராட்டம் க...
|
|
|


