ஒக்டோபரில் மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல்!
Monday, July 3rd, 2017
மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
இதற்கமைய, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றதுகுறித்த மூன்று மாகாணங்களுக்கான பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளன
அரசியல் அமைப்பு சரத்துக்களின் பிரகாரம் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டிருந்தாலும், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடு, அரசியல் அமைப்பில் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்
Related posts:
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தீவிரமடையும் ஆபத்து! வைத்தியர்கள் எச்சரிக்கை!
4,000 தாதியர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்வாய்ப்பு - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|
|


