இரட்டை குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்!
Friday, June 16th, 2017
இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் குடிவரவுத் மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மேற்படி விபரங்களை வெளியிடுமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மேற்படி தகவல்கள் வெளியிடப்படவுள்ளன.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை
மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி - அங்கீகாரம் வ...
இஸ்ரேலின் ‘அயன் டோம்’ கட்டமைப்பில் தோல்வி - இஸ்ரேல் இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரானின் ஏவுகணைகள்!
|
|
|


