முதலமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவு!
Thursday, June 15th, 2017
இலங்கை தமிழரசு கட்சியை தொடர்ந்து புறக்கணித்து வந்தமையால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்
வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் முதலமைச்சர் மேற்கொண்ட தீர்மானத்தை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்த மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்
இதற்கிடையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக வடக்கு முதல்வர் தீர்மானங்களை மேற்கொண்ட காலத்தில் இருந்தே, தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரை எதிராளியாக பார்க்க ஆரம்பித்துவிட்டதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரிதொரு செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்
Related posts:
‘குடு’ காரர்களே காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் - கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம...
வடக்கில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவி...
நாடாளுமன்றம் கலைப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெர...
|
|
|


