கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

Saturday, June 10th, 2017

கைவேலி புதுக்குடியிருப்பில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அருள்மிகு ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவின் கீழான கைவேலி 2ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள பிள்ளையார் ஆலயம் புதுப்பொலிவுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் (10) இடப்பெற்றது.

ஆலய நிர்வாகத்தினர் விடுத்திருந்த அழைப்பிற்கு இணங்க, அங்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருவறைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

முன்பதாக, சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, கருவறைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கருவறைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து, அங்கு உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, இந்நிகழ்வில் கலந்து கொள்வதானது, மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்குத் தமது பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் தவநாதன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெயராசா கிருபன் ஆகியோரும் உடனிருந்தனர்.

Related posts:

சிறந்த கல்வியியாளர்களை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் துணையிருப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
தமிழ் தேசியம் என்பது  வெறும் தேர்தல் கோசமல்ல: அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய மாபெரும் உரிமைச்சொத...
இணுவில் புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்புத்துவைத்தார் அமைச்சர் டக்ள...

தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
தமிழ் மொழி பாடநூல்களில் காணப்படும் தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது - டக்ளஸ் எம்.பி....
கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம் - புனரமைப்பு பணிகள் மற்றும் சட்ட விரோத மணல் ...