இலண்டன் தாக்குதல் கோழைத்தனமானது: ஜனாதிபதி
Monday, June 5th, 2017
இலண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் கொடூரமானதும், கோழைத்தனமானதும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலண்டன் நகரில்சனிக்கிழமை இடப்பெற்ற தாக்குதல் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்திலேயே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த தாக்குதல் காரணமாக லண்டனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு - இருநாட்டு உறவு குறித்து விரிவான...
சமூகத்தில் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் - சுகாதார சேவைகள் பிரதி பணிப்ப...
சமூக மேம்பாட்டுத் திட்ட வரையறை நீடிப்பு குறித்து இலங்கை இந்தியா இடையே இரு தரப்பு ஒப்பந்தம் !
|
|
|


