பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்!
Saturday, March 1st, 2025
பாகிஸ்தான் – நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள தொழுகை மண்டபத்தில் குறித்த தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் தொழுகையை முடித்துவிட்டு மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் போது இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
மாணவர்களுக்கு போதனை செய்யும் தலைவரொருவரும் இதன்போது கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
துருக்கி போர் விமானங்கள் தாக்குதல் - 36 பேர் உயிரிழப்பு!
அசாதாரண சூழ்நிலை விரைவில் தணிக்கப்படும் - பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் !
ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் - ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின்...
|
|
|


