காலநிலை சீர்கேடு : 28 பேர் உயிரிழப்பு!
Friday, May 26th, 2017
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர்வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் மலைநாட்டுப் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வரும் அதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் புயல் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறியுள்ளது.
Related posts:
நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் அரசியல் நோக்கங்களுக்கான போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது ...
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு - வெளியேறி விம...
அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபி...
|
|
|
வருமானம் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 5 ஆயிரம் ரூபா – யாழ் அரச அதிபர்!
மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் - இல்லையேல் மீண்டும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என இரா...
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப...


