அடுத்த ஆண்டு வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு – மருத்துவ சபை!
Wednesday, May 24th, 2017
சைட்டம் குறித்த சர்ச்சையினை முன்வைத்து வைத்தியத் துறை மாணவர்கள் அனைவரும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதால் 2018ஆம் ஆண்டு வைத்தியர்களில் தட்டுப்பாடு ஏற்படுவதினை தவிர்க்க முடியாது என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.
மேலும், பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து வைத்தியர்கள் தவிர்ந்திருப்பதால் வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பினை தொடரவுள்ள மாணவர்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும். குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் வரையில் கல்வி நடவடிக்கைகளில் 80% ஆனோர் பங்குபற்ற மாட்டார்கள் என்பதால் இறுதியாண்டு மாணவர்கள் இறுதிப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பயிற்சி பெற மாட்டார்கள் என குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அய்யூப் அஸ்மினிற்கு எதிராக யாழில் போராட்டம்!
தேர்தல் சட்டத்தின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது குறித்த யோசனை நாளை நாடாளுமன்றில்!
இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் 5 வருட விசா கையளிப்பு - இந...
|
|
|


