காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய விரைவில் விசேட குழு
Monday, May 22nd, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பில் தரவுகளுடன் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்
இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை கருத்தில் கொண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய விரைவில் விசேட குழு ஒன்று நியமிக்கபடவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்
மக்களை திசை திருப்பி இனவாத செயற்பாடுகளை தூண்டும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, கிடைக்கப்பெற்றுள்ள சமாதானத்தையும் சுதந்திரத்தையும் மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்
Related posts:
புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
ஆலய திருவிழாவில் பட்டாசு வெடித்து இளைஞன் படுகாயம்!
இலங்கை - இந்திய ஒப்பந்தங்களை இரத்துச் செய்யுமாறு கோரும் மனுக்கள் தள்ளுபடி!
|
|
|


