சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்வு
Wednesday, April 12th, 2017
தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் அனைத்தினதும் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாதம்-08 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருக்குமெனவும், குறித்த நேரக் கட்டுப்பாடு எதிர்வரும்-14 ஆம் திகதி முதல் வழமை போன்று அமுலுக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேரக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களை துன்புறுத்த முயற்சித்ததாலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் - அம...
மாங்குளம் - துணுக்காய் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் 4 பேர் காயம்!
வடக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


